தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுராந்தகம் அருகே 5,320 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்! - செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு : மதுராந்தகம் அருகே போலி வாகனப் பதிவு எண் கொண்ட லாரியில் கடத்தி வரப்பட்ட 5,320 லிட்டர் எரி சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம்
பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம்

By

Published : Jul 5, 2020, 5:26 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே ஒரத்தி காவல் நிலையத்திற்கு உட்பட்ட முருங்கை என்ற இடத்தில், நேற்று இரவு ஒரத்தி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவலர்கள் ரோந்துப் பணியிலும், சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அவ்வழியே வேகமாக வந்த லாரி ஒன்றின் ஓட்டுனர், காவல் துறையினரைக் கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடியுள்ளார். தொடர்ந்து லாரியை காவல் துறையினர் சோதனை செய்தபோது அதில் மொத்தம் 152 கேன்களில், 35 லட்சம் மதிப்புள்ள ஐந்தாயிரத்து 320 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் இருந்தது தெரிய வந்தது.

இவற்றை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்திய நிலையில், லாரி போலி வாகனப் பதிவு எண் கொண்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து ஒரத்தி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆரல்வாய்மொழியில் நாட்டு வெடிகுண்டி வெடித்து உயிரிழந்த கடமான்!

ABOUT THE AUTHOR

...view details