தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3,600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்: போலீசார் விசாரணை! - 3600 kg ration rice hoarded

செங்கல்பட்டு: பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,600 கிலோ ரேஷன் அரிசியை, படாளம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

3600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்
3600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்

By

Published : Jun 13, 2021, 8:41 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், பூதூர் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக வீடு ஒன்று உள்ளது. இரவு நேரத்தில் இந்த வீட்டிற்கு வாகனங்கள் வந்து செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை அப்பகுதி இளைஞர்கள் பல நாள்களாக கவனித்து வந்துள்ளனர்.

ரேஷன் அரிசி பதுக்கல்:

இந்நிலையில், இன்று (ஜூன்.13) சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் ஒன்று அங்கே வந்தது. அந்த வாகனம் சென்ற பின்னர் அப்பகுதியினர் அங்கே சென்று பார்த்தபோது, ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

காவல் துறையினர் விசாரணை:

தொடர்ந்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு குடிமைப்பொருள் அலுவலர்களுடன் வந்த காவல் துறையினர், 3,600 கிலோ எடையுள்ள 100க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். பின் அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கள்ளச்சாராயம் தயாரித்த மூன்று பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details