செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் முதலமைச்சர் பழனிசாமியின் 160 நீள மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் கடந்த பத்து நாள்களில் 50 மணல் சிற்பக் கலைஞர்களால் 50 டன் மணலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு 160 அடி நீள மணல் சிற்பம் - மாமல்லபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு 160 அடி நீள மணல் சிற்பம்
செங்கல்பட்டு: மாமல்லபுரம் கடற்கரையில் 160 அடி நீளத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
cm palanisamy
திருக்குழுகுன்றம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.டி. ராகவன் தலைமையில், கல்லூரி மாணவர்கள் இந்த சிற்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த மணல் சிற்பத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் திறந்து வைத்தார். இந்த சிற்பம் ஒரு வாரத்திற்கு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மக்களின் குறைகளை கேட்கிறது - கனிமொழி