தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு பேர் விடுதலையில் நளினியின் மனு தள்ளுபடி -சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jul 18, 2019, 11:08 AM IST

ஏழு பேர் விடுதலையில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி -சென்னை உயர்நீதிமன்றம்!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றும், நளினியின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details