தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் திருநாவுக்கரசை சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி! - pollachi issue

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் திருநாவுக்கரசை சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

pollachi

By

Published : Mar 15, 2019, 5:28 PM IST

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது, சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று முதல் பொள்ளாச்சி முகாமிட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக அறியப்படும் திருநாவுக்கரசை சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றிட வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்தும் அழுத்தங்கள் வரத் தொடங்கியதையடுத்து, நேற்று இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு மாற்றி அரசாணை வெளியிட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.


ABOUT THE AUTHOR

...view details