தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 4, 2019, 11:31 AM IST

ETV Bharat / state

தாய் மரணத்தில் மர்மம்: தந்தை மீது நடவடிக்கை எடுக்க மகன்கள் வலியுறுத்தல்!

சென்னை: தாயின் மரணத்தில் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகன்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Chennai lady murder case husband arrested

சென்னை அம்பத்தூர் அடுத்த ஓரகடம் எஸ்.வி.நகர் பெருமாள் கோவில் தெருவில் வசித்துவந்தவர் சுமதி (38). இவரது கணவர் மூர்த்தி (44). இவர் பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் வசித்துவருகிறார். தனியார் நிறுவன ஊழியர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இதற்கிடையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமதி பிரிந்து வாழ்ந்துவந்தார். பின்னர் அவர் அம்பத்தூரில் தனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இவருடன் இரண்டு மகன்களும் சென்றுவிட்டனர். ஒரு மகள் மட்டும் தந்தையுடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில் கணவர் மூர்த்தியை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் இருந்து சென்ற சுமதி, காணவில்லை. இது குறித்து மூர்த்தியிடம் கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த மகன்கள் தங்களது தாய்காணவில்லை என காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இதற்கிடையில் சுமதி அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் படுகாயங்களுடன் சடலமாக கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி ரயில்வே காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில்இரு மகன்கள், உறவினர்கள் சுமதியின் இறப்பில்மூர்த்தி மீது சந்தேகம் உள்ளது எனவும் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினரிடம் வலியுறுத்தினர்.இதன் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர்மூர்த்தியிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

தாய் மரணத்தில் மர்மம்: தந்தை மீது நடவடிக்கை எடுக்க மகன்கள் வலியுறுத்தல்!


ABOUT THE AUTHOR

...view details