அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பார்த்த பின்னர், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கேட்டு பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கான மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.