காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதரை தரிசனத்திற்காக தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், கோயில் நிர்வாகத்திற்கு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஜமீன் குடும்பத்தினர் அத்திவரதரை தரிசிக்கவும் ஒருநாள் உற்சவமூர்த்தி பூஜையில் கலந்துகொள்ளவும் அனுமதி அளிக்க கோரிக்கை-விடுத்துள்ளனர்.
இது குறித்து உடையார்பாளையம் ஜமீன்தார் வம்சாவளி ராஜ்குமார், பழனியப்பன் கூறியபோது, "16ஆம் நூற்றாண்டில் முகலாய படையெடுப்பின்போது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகிய கோயில்களில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு உடையார்பாளையத்தில் உள்ள எங்களது ஜமீன்தார் அரண்மனை, கோயில்களில் பாதுகாப்பாக 40 ஆண்டுகளாக வைத்திருந்தோம்.
மேலும், காஞ்சிபுரம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆகம விதிகளின்படியே பூஜைகள் அனைத்தும் நடைபெற்றன. போர் முடிவுற்ற பிறகு கோயில் உற்சவர் சிலைகள் அனைத்தும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கோயில்கள் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.