தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு! - ariyalur district news

அரியலூர்: வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக சுவிட்சை ஆன் செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Nov 2, 2020, 5:05 PM IST

அரியலூர் நகரில் தியாகி ஜெயராமன் தெருவில் விஜய் என்பவர் மெக்கானிக் கடை வைத்து நடத்திவருகிறார். இவரது கடையில் சிவா என்பவர் வாட்டர் சர்வீஸ் வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், சிவா வழக்கம்போல் இன்று (நவம்பர் 02) டூவீலர் ஒன்றுக்கு வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவா மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், இது குறித்து தகவலறிந்த அரியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, உடலை உடற்கூராய்வுக்காக அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மேலே வாழைக்குலைகள், உள்ளே 4 டன் ரேஷன் அரிசி: லாரியை மடக்கிப் பிடித்த அலுவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details