அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குறிச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா. ஏழு ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த இவர், தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து, அப்பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து ஓராண்டுக்கு முன்பு மறுமணம் முடித்த அப்பெண், கணவருடன் இணைந்து வசித்து வருகிறார். இதனையடுத்து கணவரின் சொந்த வீட்டில் குடியிருந்த வெண்ணிலாவை, அங்கிருந்து வெளியேற்றியதாகவும், முதல் கணவரின் தங்கை வீட்டுக்காரர் தன்னிடம் தொந்தரவு தருவதாகவும், இதனால் குவாகம் காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் கூறப்படுகிறது.