தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைக் காவலர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கல்! - Appreciation to the purity cops

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பணி புரியும் தூய்மைக் காவலர்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது.

தூய்மை காவலர்கர் ஒருவருக்கு சேலை வழங்கும் காட்சி
தூய்மை காவலர்கர் ஒருவருக்கு சேலை வழங்கும் காட்சி

By

Published : Apr 17, 2020, 5:42 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தாக்குதலிலும் தங்களது பணியை தொடர்ந்து மக்களுக்காக செய்துவரும் தூய்மைக் காவலர்களைப் பாராட்டி, அரியலூர் நகர வணிகர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

தூய்மைக் காவலர்களுக்கு சேலை, துண்டு வழங்கல்

இதில் பெண் தூய்மைக் காவலர்களுக்கு சேலை, ஜாக்கெட் மற்றும் ஆண் தூய்மைக் காவலர்களுக்கு வேஷ்டி, கைலி, துண்டு ஆகியவை வழங்கப்பட்டது. முன்னதாக அவர்களது பணியைப் பாராட்டி, தூய்மைக் காவலர்கள் மீது பூத்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில், சுகாதாரப்பணிகளின் இணை இயக்குநர் சார்பில், தூய்மைக் காவலர்கள் அனைவருக்கும் இனிப்புகள், பழங்கள், பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன.

தூய்மைப் பணி செய்வதன் மூலம் தாங்கள் பெருமைப்படுவதாக தூய்மைக் காவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:உணவுப் பொருள்கள் வழங்குவதற்கு தடை: வைகோ தொடுத்த வழக்கு முடித்துவைப்பு

ABOUT THE AUTHOR

...view details