அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சாய்கீர்த்தி என்ற மாணவர் யுகேஜி படித்து வருகிறார். அவர் படித்த பள்ளியில் 'குளோபல் புக் ரிசர்ச் பவுண்டேஷன்' சார்பில் சிறுவர்களுக்கான நுண்ணறிவு போட்டி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட சாய்கீர்த்தி 5 நிமிடம் 19 வினாடிகளில் 200 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து அந்நாட்டின் பெயர், தலைநகரத்தை கூறி அசத்தியுள்ளார்.
இதன்மூலம் அவர், சில்ட்ரன் ரெக்கார்டு, நேஷனல் ரெக்கார்டு, ஆசிய-பசுபிக் ரெக்கார்டு, குளோபல் ரெக்கார்டு ஆகிய நான்கு பிரிவுகளில் சாதனைபடைத்துள்ளார்.