லால்குடியில் இருந்து திருமழபாடிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து கடைசி நடையாக திருமழபாடிக்கு இரவு 10.30 மணிக்கு மேல் வந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு அதிகாலையில் 6.30 மணிக்கு மீண்டும் இயக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்றிரவு ஓட்டுநர் செந்தில் குமார் மற்றும் நடத்துநர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பேருந்தை திருமழபாடி கால்நடை மருத்துவமனை அருகே நிறுத்திவிட்டு கால்நடை மருத்துவமனையில் படுத்து உறங்கியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.