அரியலூர் மாவட்டம், செந்துறைப் பகுதியில் நேற்று(ஜூலை 11) மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கிராமப்பகுதிகளில் உள்ள காட்டு ஓடைகளில், மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் இலங்கைச்சேரி கிராமத்தில் உள்ள காட்டு ஓடையில் பதுங்கி இருந்த மான் குட்டி ஒன்றை, வெள்ளம் இழுத்து வந்தது.
பின் அந்த மான் ஆனது, கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள கருவேல மரங்களில் சிக்கிக் கொண்டது. அப்போது அங்கிருந்த நாய்கள் அந்த மானைக் கடித்துக் குதறின.