தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 23, 2019, 3:57 PM IST

ETV Bharat / state

சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நடும் போராட்டம்

அரியலூர்: சேதமடைந்த சாலையை சீர் செய்யக் கோரி கழுவந்தோண்டி கிராமத்தினர் சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாற்று நடும் போராட்டம்


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது.

சேதமடைந்த சாலையை சீர் செய்ய கோரி நாற்று நடும் போராட்டம்

எனவே சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து அப்பகுதியினர் நூதன முறையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details