தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறு தானிய சிற்றுண்டி வழங்கும் கிராம மக்கள் - அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறு தானிய சிற்றுன்டி வழங்கும் கிராம மக்கள

அரியலூர் : ஆசிரியர்களும், ஊர்பொதுமக்களும் இணைந்து மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க இதுபோன்று முயற்சியில் ஈடுபட்டு வருவது மற்ற பள்ளிகளுக்கு ஒரு உதாரணமாகவும், ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது.

School evening snacks
School evening snacks

By

Published : Mar 7, 2020, 12:00 AM IST

Updated : Mar 8, 2020, 4:53 PM IST

அரியலூர் மாவட்டம், சிறுவளூரில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியானது 1954ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டு உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 130 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 10ஆம் வகுப்பில் 34 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி ஊர் பொது மக்களால் வழங்கப்படடு வருகிறது.

இந்தப் பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். இவர்கள் காலை பள்ளிக்கு வந்து மாலை வரை படிக்கும்போது சோர்வு அடைந்து மாலையில் எடுக்கப்படும் சிறப்பு வகுப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் உள்ளது. இவர்கள் சோர்வடையாமல் இருக்க அப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து இப்பள்ளி மாணவர்களுக்கு மாலையில் உணவளிக்க திட்டமிட்டனர்.

இதனைத் தொடந்து ஊர்பொதுமக்கள் தினமும் மாலை மாணவர்களுக்கு சிறுதானிய உணவுகளான குதிரைவாலி, சாமை, கேழ்வரகு, திணை, எள்ளுருண்டை போன்ற உணவுகளை சமைத்து அவர்களுக்கு வழங்கினர். இந்த சிறுதானிய உணவினை மாணவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் மாணவர்களின் உடல் நலன் மேம்படுவதுடன், ஞாபகத்திறனும் அதிகரிக்கும். இதனால் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடும் அதிகரிக்கும். இதன் காரணமாகவே மக்கள் மாணவர்களுக்கு இது போன்ற சிறு தானிய உணவுகளை மாலை நேரம் வழங்கி வருகின்றனர்.

ஆசிரியர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்க இதுபோன்று முயற்சியில் ஈடுபட்டு வருவது மற்ற பள்ளிகளுக்கு ஒரு உதாரணமாகவும், ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது.

சிறு தானிய சிற்றுண்டி வழங்கும் கிராம மக்கள்

இந்தப் பள்ளியானது இதுநாள் வரை உயர்நிலைப் பள்ளிக்கான கட்டடம் இல்லாததால் நடுநிலைப் பள்ளியின் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. எனவே இப்பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக்கென கட்டடம் கட்டினால் பள்ளியின் மாணவர்களின் சேர்ககை அதிகரிப்பதோடு தேர்ச்சி விழுக்காடும் அதிகரிக்கும் என அப்பகுதி மக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: புல்வாமா தாக்குதல்: தொடரும் தேசிய புலனாய்வு முகமையின் நடவடிக்கை

Last Updated : Mar 8, 2020, 4:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details