தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்கொள்முதல் நிலையத்தின் இரவு காவலர் தற்கொலை! - அரியலூரில் நெல்கொள்முதல் நிலைய இரவு காவலர் தற்கொலை

அரியலூர்: நெல்கொள்முதல் நிலையத்தில் இரவு காவலராக பணியாற்றி வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்கொள்முதல் நிலையத்தின் இரவு காவலர் தற்கொலை
நெல்கொள்முதல் நிலையத்தின் இரவு காவலர் தற்கொலை

By

Published : May 23, 2020, 11:37 AM IST

அரியலூர் மாவட்டம் திருமானூர் தெற்கு காலனி தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர், இலந்தைகுடம் நெல்கொள்முதல் நிலையத்தில் இரவு காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று (மே 22) இரவு ஏழு மணியளவில் நெல்கொள்முதல் நிலைய அலுவலக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பிரான்சிஸ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இரு தினங்களுக்கு முன் உள்ளூர் சுமைதூக்கி தொழிலாளர்களுக்கும், பிரான்சிஸ்க்கும் இடையே தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால், அவரை கொலை செய்து தூக்கிலிட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மது போதையில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்...!

ABOUT THE AUTHOR

...view details