அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருபவர் ஜி.எஸ்.டி. கிறிஸ்டி மேரி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்று திரும்பியுள்ளார்.
சுகாதார நிலைய செவிலியருக்கு கரோனா பாதிப்பா? - அரியலூர் செவிலியர் கரோனா தனிப்பிரிவில் அனுமதி
அரியலூர்: ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் காய்ச்சல் காரணமாக கரோனா தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Nurse admitted Lorena ward
பின்னர் அவருக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல், உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.