தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 11, 2019, 9:29 AM IST

ETV Bharat / state

அகவிலைப்படி உயர்த்தி வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

அரியலூர்: அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரி ஜெயங்கொண்டம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகவிலைப்படி உயர்த்தி வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மூன்று விழுக்காடு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்து இதுவரை அரசாணை வெளியாகாத நிலையில், ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரியும், நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்கக் கோரியும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.

அகவிலைப்படி உயர்த்தி வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details