அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு, ஆனந்தவாடி கிராமத்தில் 1982-ஆம் ஆண்டு 161 விவசாயிகளிடமிருந்து 270 ஏக்கர் நிலம், ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 2,500 வீதம் வாங்கப்பட்டது.
இந்நிலையில் இதுநாள்வரை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நிரந்தர வேலை வழங்கவில்லை. இதனையடுத்து தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அரசு சிமென்ட் ஆலைகள் விவசாயிகளில் தகுதியுள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இன்று முதல் கையப்படுத்தப்பட்ட நிலத்தில் சுண்ணாம்புக்கல் எடுக்க ஆலை நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.