தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா! - அரியலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா

அரியலூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்

By

Published : Feb 26, 2020, 6:35 PM IST

அரியலூர் மாவட்டம் லிங்கத்தடி மேடு கிராமத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் படிக்கும் அரசு உதவிப்பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு தாமரைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம்குமார், நோட்டு, புத்தகங்கள், பேனா உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார். மேலும், இப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், மேற்படிப்பிற்கான செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்

இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அதிமுக தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் உணவு வழங்கினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details