பெரம்பலூரிலிருந்து தஞ்சாவூர் வரை 70 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. பெரம்பலூருக்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட பகுதியில் அரியலூரில் ரயில்வே கிராசிங் உள்ளது. இதனால் அவ்விடத்தில் ரயில்வே துறை சார்பில் சேது பாரத திட்டத்தின் சார்பில் ரயில்வே மேம்பாலம், இணைப்பு மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்காக 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்தப் பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கியது. தற்போது மேம்பாலப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலையை மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் தார் சாலை அமைக்கும் பணியும்,வர்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுவிட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்நத மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வகையில் இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.