தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரிப் பேருந்து மீது லாரி மோதியதில் 50 மாணவர்கள் காயம் - ariyalur bus accident latest

அரியலூர்: கல்லூரிப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 50 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.

ariyalur college students
ariyalur college students

By

Published : Feb 6, 2020, 9:26 AM IST

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் பெரியாண்டவர் பொறியியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்த மாணவர்களை ஏற்றி அக்கல்லூரிப் பேருந்து ஒன்று நெஞ்சாலையில் சென்றுள்ளது.

அப்போது, சிமெண்ட ஆலைக்கு சுண்ணாம்புக் கற்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி, பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் சென்ற 50 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்கள்

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் மாணவர்களையும் இரண்டு ஓட்டுநர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க : 'பெருவுடையார் கோயில் குடமுழுக்கு முழுமையான வெற்றியல்ல' - சீமான்

ABOUT THE AUTHOR

...view details