அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் நகராட்சி நிர்வாக அலுவலர்கள், வீட்டில் இருந்து வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி, முகக்கவசத்தை அணியுமாறு அறிவுறுத்துகின்றனர். தொடர்ந்து அவர்களுக்கு நூறு ரூபாய் அபராதமும் விதிப்பதோடு, ஐந்து முகக்கவசங்களை இலவசமாக வழங்குகின்றனர்.