டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் மகாவீர் ஸ்வரூப் நான்காவது இடத்தை பிடித்து தோல்வியுற்றார்.
துப்பாக்கி சுடும் வீரர் மகாவீர் ஸ்வரூப் அன்கல்கர் இறுதிச் சுற்றில் 203.9 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். இதனால் இவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு நழுவியது.
முன்னதாக, 51.2, 102.1, 122.7, 143.0, 164.2, 183.6 புள்ளிகளுடன் முன்னிலை வகித்த இவர் இறுதியில் 203.9 புள்ளிகளை எடுத்தார். சீன வீரரான ஷாவ் டோங் 246.5 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இவருக்கு அடுத்தபடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்ட்ரி டோரோஷென்கோ 245.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், கொரியா நாட்டை சேர்ந்த ஜனிகோ பார்க் 224.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.