தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 7, 2021, 10:53 AM IST

Updated : Aug 7, 2021, 11:06 AM IST

ETV Bharat / sports

ஒலிம்பிக் கோல்ஃப் போட்டி: அதிதி அசோக் அதிர்ச்சித் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

ஒலிம்பிக் கோல்ப் போட்டி
அதிதி அசோக்

டோக்கியோ ஒலிம்பிக்கின் 16ஆவது நாள் போட்டிகள் இன்று (ஆக. 7) நடைபெறுகின்றன. இதில் கோல்ஃப் விளையாட்டின் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில், இந்திய வீராங்கனை அதிதி அசோக் விளையாடினார்.

60 வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், அதிதி அசோக் நேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துப் போட்டியை நிறைவுசெய்திருந்தார். அதையடுத்து இன்று இறுதிச்சுற்று நடைபெற்றது. அப்போது மழை பெய்ததால் சற்று நேரம் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் தொடங்கிய போட்டியில், நியூசிலாந்து நாட்டு வீராங்கனை லிடியா கோவுக்கும், அதிதிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட அதிதி நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, அமெரிக்காவின் நெல்லி கோர்டா முதலிடம் பிடித்தார்.

இதையும் படிங்க: வெள்ளிப் பதக்கம் வெகு அருகில்... சாதிப்பாரா அதிதி அசோக்?

Last Updated : Aug 7, 2021, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details