தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 31, 2021, 8:53 AM IST

Updated : Aug 31, 2021, 10:54 AM IST

ETV Bharat / sports

பாரா ஒலிம்பிக் வில்வித்தை: ராகேஷ்குமார் காலிறுதிக்குத் தகுதி

டோக்கியோ பாரா ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் ராகேஷ்குமார் காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

ராகேஷ்குமார்
ராகேஷ்குமார்

டோக்கியோவில் நடந்துவரும் பாரா ஒலிம்பிக்கில் 54 இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியாஏழு பதக்கங்களை வென்றுள்ளது. அந்தவகையில், காம்பவுண்ட் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்லோவாகியா வீரர் மரியன் மரெகாக்கை (Marian Marecak) எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் ஜொலிக்க தவறிய ராகேஷ் 53 புள்ளிகளுடன் பின்தங்கியிருந்தார். பின்னர், சிறப்பாகச் செயல்பட்ட அவர் 140-க்கு 137 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியைத் தனதாக்கினார்.

இதன் மூலம், வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் ராகேஷ்குமார் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். முன்னதாக, இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஹாங்காங் வீரர் சென் நகாய்-வை ராகேஷ்குமார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: PARALYMPIC SHOOTING: இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார் ரூபினா ஃபிரான்சிஸ்

Last Updated : Aug 31, 2021, 10:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details