சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பால் நடத்தப்பட்டுவரும் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, சிலியின் பார்போரா கிரெஜ்கோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய முகுருசா 7-6 என்ற கணக்கில் போராடி முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி அசத்தினார்.