தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 8, 2020, 2:14 PM IST

ETV Bharat / sports

யூ.எஸ். ஓபன்: அரையிறுதி வாய்ப்பை இழந்த போபண்ணா இணை!

நியூயார்க்: யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் ரோகன் போபண்ணா - டெனிஸ் ஷபோவாலோ இணை தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

US Open: Indian challenge ends as Bopanna-Shapovalov knocked out in QF
US Open: Indian challenge ends as Bopanna-Shapovalov knocked out in QF

யூ.எஸ். ஓபன் 2020 டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (செப். 08) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவாலோ இணை ரஷ்யாவின் ஜீன்-ஜூலியன் ரோஜர் இணையை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜீன்-ஜூலியன் ரோஜர் இணை சிறப்பாக விளையாடி முதல் செட் கணக்கை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி, போபண்ணா இணைக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் ஜீன்-ஜூலியன் ரோஜர் இணை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இதன்மூலம் யூ.எஸ். ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ரஷ்யாவின் ஜீன் - ஜூலியன் ரோஜர் இணை 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ரோகன் போபண்ணா இணையை வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இத்தோல்வியின் மூலம் இந்தியாவின் ரோகன் போபண்ணா - கனடாவின் டெனிஸ் ஷபோவாலோ இணை யூ.எஸ். ஓபன் தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க:டெஸ்ட் அணிக்கு திரும்பும் நம்பிக்கை உள்ளது - ஷிகர் தவான்!

ABOUT THE AUTHOR

...view details