ஆடவர் டென்னிஸ் அணிகளுக்கான ஏடிபி கோப்பை தொடரின் முதல் சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் பங்கேற்றன.
இந்நிலையில், நேற்று சிட்னியில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் தலைமையிலான ஸ்பெயின் அணி, இரண்டாம் நிலை வீரரான நோவாக் ஜோகோவிச் தலைமையிலான செர்பியா அணியுடன் மோதியது.
இதைத்தொடர்ந்து, ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் ஸ்பெயின் வீரர் பட்டிஸ்டுவா அகுட் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் செர்பியாவின் துசன் லஜோவிக்கை வீழ்த்தினார். இதையடுத்து, நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், நடால் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர்.