ஜூர்மாலா: லாட்வியா வீராங்கனைக்களுக்கு எதிராக பெல்லி ஜீன் கிங் கோப்பை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த அங்கிதா ரெய்னா, கர்மன் கெளர் தன்டி என இருவரும் தோல்வியைத் தழுவினர்.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் லாட்வியா வீராங்கனைகளான ஜெலினா ஒஸ்தபென்கோ, அனஸ்டாசிஜா செவஸ்டோவா ஆகியோரிடம் இந்தியா வீராங்கனைகளான அங்கிதா ரெய்னா, கர்மன் கெளர் ஆகியோர் தோல்வியுற்றனர்.
ஒஸ்தபென்கோவுக்கு எதிரான போட்டியில் 2-6,7-5, 5-7 என செட் கணக்கில் தோல்வியடைந்தார் அங்கிதா ரெய்னா. இதுகுறித்து அவர் போட்டிக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
முதல் செட் ஆட்டத்தின்போது ஒஸ்தபென்கோ ஆட்டத்தை நன்கு கணித்துவிட்டேன். ஆனால் அதற்கு ஏற்றவாறு எனது ஆட்டத்தை மாற்றிக்கொள்ளாமல் தவறு செய்தேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அங்கிதா ரெய்னா, நாட்டுக்காக விளையாடும்போது ஒவ்வொரு புள்ளிகளையும் முக்கியமான கருத வேண்டும். முதல் செட் ஆட்டத்தில் நான் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அங்கே விட்டதை அடுத்த செட்டில் பிடிக்க முடியவில்லை.