சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதுவரை இந்த வைரஸால் உலகளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாட்டிலும் மருத்துவர்கள் தீவிரமாக உழைக்கின்றனர்.
அதேசமயம், இந்த கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு தரப்பினர் நன்கொடை வழங்கிவருகின்றனர். அந்தவகையில், செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரும் உலகின் முதல் நிலை வீரருமான நோவாக் ஜோகோவிச், அந்நாட்டிற்கு ஒரு மில்லியன் யூரோக்களை ( இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி 28 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.