சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால், சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்த நிலையில், ருமேனியாவில் மருத்துவ உபகரணங்கள் வாங்க அரசாங்கத்திற்கு தான் பணம் வழங்கவுள்ளதாக அந்நாட்டு டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப் தெரிவித்துள்ளார். இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், "இதுபோன்ற மோசமான நிலை ஏற்படும் என யாரும் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். நாம் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் இந்த தருணத்திலும் மருத்துவர்கள் தங்களது உயிர்களை பணயம் வைத்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவருகின்றனர்.