தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சின்சினாட்டி டென்னிஸ்: காலிறுதிச் சுற்றில் ஆஷ்லே, கரோலினா!

ஓகியோ: சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீராங்கனைகளான ஆஷ்லே பார்டி, கரோலினா பிளிஸ்கோவா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

By

Published : Aug 16, 2019, 6:37 PM IST

tennis

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 16ஆவது சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவிட்டை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ஆஷ்லேவை வீழ்த்தி கொன்டாவிட் கைப்பற்றினார். பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லே 4-6, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கொன்டாவிட்டை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ஸ்வீடனைச் சேர்ந்த ரெபேக்கா பீட்டர்சன்னை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கரோலினா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரெபேக்காவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.

அதன்படி, காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, கிரீஸ் நாட்டின் மரியா சக்கரியை எதிர்கொள்கிறார். மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை எதிர்கொள்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details