பிரேசில் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் டியாகோ மாடோஸ் (31). இவர் கடந்த சில ஆண்டுகளாக டென்னிஸ் போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்திறனைதான் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, கடந்த ஆண்டில் பிரேசில், இலங்கை, ஈக்வேடார், போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஐடிஎஃப் அளவிலான 10 டென்னிஸ் போட்டிகளில் இவர் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டிகளில் இவர் திட்டமிடப்பட்டு தோல்வியடைந்தது தற்போது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், மேட்ச் ஃபிக்ஸிங் விசாரணையின் போது இவர் தனது வருமனாம் குறித்த பதிவுகளையும் வழங்கத் தவறினார் மற்றும் தடயவியல் பரிசோதனையில் தனது மொபைல் ஃபோன்களை சமர்ப்பிக்கவும் மறுப்புத் தெரிவித்தார்.