ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளை மையமாகக் கொண்டு 'கல்ச்சர் ஆஃப் கரப்சன்' (culture of corruption) என்ற ஆவணப்படம் வெளியானது. அப்படத்தில் உலகின் முக்கிய பளுதூக்கும் வீரர்கள் மிகவும் அரிதாகவே ஊக்கமருந்து சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதிகாரிகளும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும், பளுதூக்குதல் அமைப்பிலுள்ள ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.
இதனையடுத்து சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கடும் சர்ச்சைக்கு உள்ளாகினர். மேலும் அவர்களை விசாரிக்கும்படி வாடா, ஒலிம்பிக் கூட்டமைப்புகள் உத்தரவிட்டிருந்தன.
இதனையடுத்து சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் அஜான், தனது பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதனை சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பின் துணைத்தலைவர் உர்சுலா பாப்பாண்ட்ரியா (Ursula Papandrea) உறுதிப்படுத்தியுள்ளார்.