தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முன்னாள் உலக சாம்பியன்! - தனது முதல் ஒலிம்பிக் தொடருக்கு தேர்வாகியுள்ளா

அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த் தகுதி பெற்றுள்ளார்.

Tejaswini Sawant

By

Published : Nov 9, 2019, 7:42 PM IST

அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான துப்பாக்கிச் சுடுதல் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வந்தன.

இதில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தேஜஸ்வினி கலந்து கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் 1171 புள்ளிகளைப் பெற்று தகுதிச்சுற்றில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு 12ஆவது ஆளாக தகுதி பெற்று அசத்தியுள்ளார். மேலும் இந்த போட்டியில் 1178 புள்ளிகளைப் பெற்ற சீனாவின் ஷி மெங்யாவொ முதலிடம் பிடித்தார்.

இதையும் படிங்க:

மேரி கோமுடன் மோதும் நிஹத் ஸரீன் - டோக்கியோ ஒலிம்பிக்கில் என்ட்ரி தரப்போவது யார்?


இதன் மூலம் 39 வயதான தேஜஸ்வினி சாவந்த் தனது முதல் ஒலிம்பிக் தொடருக்கு தேர்வாகியுள்ளார். மேலும் இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆசிய துப்பாக்கிச் சுடுதல்: இந்திய வீராங்கனை தங்கம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details