இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பயிற்சி மையங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பயிற்சியின்போது மத்திய அரசு வழிக்காட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனக் கூறியது.
இந்நிலையில், இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனையாக அறியப்படுபவர் டூட்டி சந்த். தற்போது மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கில் கொண்டு வந்த தளர்வு காரணமாக, இரண்டு மாத இடைவெளிக்கு பின், புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் தனது பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய சந்த், 'மைதானங்களில் பயிற்சி எடுக்க அனுமதியளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுநாள் அவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக எனது உடற்தகுதி மிகுந்த பாதிப்படைந்துள்ளது. தற்போது நான் எனது உடற்தகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். மேலும் என்னுடன் இப்போது வேறு எந்த வீரர்களும், பயிற்சியாளர்களும் இல்லை.