உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுவருகிறது. இதில் இறுதி நாளான நேற்று கலப்பு இரட்டையர் 10 மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் மனு பாக்கர்-சவுரப் சவுத்ரி இணை, சக நாட்டைச் சேர்ந்த யசஷ்வினி சிங் தேஷ்வால்-அபிஷேக் வர்மா இணையுடன் மோதியது.
இந்தப்போட்டியில் மனு-சவுத்ரி இணை 400 புள்ளிகளுக்கு 394 புள்ளிகள் பெற்று தேஷ்வால்-அபிஷேக் இணையை வீழ்த்தி உலகக்கோப்பை கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.
மேலும் தேஷ்வால்-அபிஷேக் இணை இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும் சீனாவின் ஜைன் ரான்ஷின்-பேங் வெய் இணை மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றது.