பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில், மூன்றாவது இந்தியன் கிராண்ட்பிரிக்ஸ் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பாரா ஈட்டி எறிதல் பிரிவில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுமித் ஆன்டில் பங்கேற்றார்.
இப்போட்டியில் சுமித் ஆன்டில் 66.43 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து, புதிய தேசிய சாதனையைப் படைத்து, தங்கப் பதக்கத்தையும் உரித்தாக்கினார். இப்போட்டியில் வென்றதன் மூலம் டோக்கியோ பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு, சுமித் ஆன்டில் தகுதிப்பெற்றார்.