தமிழ்நாடு

tamil nadu

#AsianTableTennisChampionships2019: காலிறுதியில் நுழைந்த இந்திய ஜோடி

By

Published : Sep 19, 2019, 10:46 PM IST

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் - சத்தியன் ஞானசேகரந் ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Table Tennis

24ஆவது ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இந்தோனேசியாவின் யோகியகர்டாவில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னையை சேர்ந்த சரத் கமல் - சத்தியன் ஞானசேகரன் ஜோடி நேரடியாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இதில், ஜோர்டான் நாட்டை சேர்ந்த அபோ யமன் சைத் - அல்ட்மைசி சேயாத் இணையை 11-4, 11-7, 11-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாம் சுற்றில் இந்த இணை, பஹ்ரைன் நாட்டை சேர்ந்த மஹ்ஃபூத் சையத் - ரஷீத் ஜோடியை எதிர்கொண்டது. இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரத் கமல் - சத்தியன் ஞானசேகரன் 11-8, 11-6, 11-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் இந்த ஜோடி, சீனாவின் லியாங் ஜிங்குன் - லின் ஜோடியை எதிர்கொள்கிறது. இதேபோல், நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன், அந்தோனி அமல்ராஜ், தக்கர் மனவ் விகாஷ் ஆகியோர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

ABOUT THE AUTHOR

...view details