தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘கொரோனா வைரஸ் தொடர்ந்தால் ஒலிம்பிக் டெஸ்ட் போட்டியிலிருந்து இந்தியா விலகும்’ - டோக்கியோ ஒலிம்பிக்

கொரோனா வைரஸ் காய்ச்சால் தொடர்ந்து பரவிவந்தால் ஏப்ரல் மாதம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்களை அனுமதிக்க மாட்டோம் என இந்திய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் தெரிவித்துள்ளது.

NRAI may opt out of Olympics 'test' event if Coronavirus continues
NRAI may opt out of Olympics 'test' event if Coronavirus continues

By

Published : Feb 27, 2020, 11:11 PM IST

சீனாவின் வூஹான் நகரில் தொற்றிய கொவிட்-19 வைரஸ் (கொரோனா வைரஸ்) அந்நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் இதுவரை 2,715 பேர் உயிரிழிந்துள்ளதாகவும், 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாகவும், சீன அரசு தெரிவித்துள்ளது. இதனால், சீனாவில் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டன. மேலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவிவந்தால் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவின.

இதையடுத்து, கொரோனா வைரஸ் காரணமாக வரும் மார்ச் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரிலிருந்து சீனா, வடகொரியா, ஹாங்காங் உள்ளிட்ட ஆறு அணிகள் விலகியுள்ளதாக இந்திய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் நேற்று தெரிவித்தது. இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் ஒலிம்பிக் டெஸ்ட் போட்டி டோக்கியோவில் ஏப்ரல் 16 முதல் 26 வரை நடைபெறவுள்ளது. இதில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் பங்கேற்று தங்களைத் தயார் படத்தவுள்ளனர்.

இந்திய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் தலைவர் ரனிந்தர் சிங்

இந்த நிலையில், கொரோனா வைரஸ் ஏப்ரல் மாதத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றால், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் ஒலிம்பிக் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என இந்திய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் தலைவர் ரனிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கொரனோ வைரஸால் ஏதேனும் பாதிப்பு உள்ளது என இந்திய ஒலிம்பிக் சம்மேளனமோ அல்லது சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சங்கமோ தெரிவித்தால், நிச்சயம் நாங்கள் எங்களது வீரர்களை இந்தத் தொடரில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை தொடரில் பங்கேற்று ஏதேனும் ஒரு இந்திய வீரருக்கு கொரோனா தோற்றுவிடும் என்ற பயத்தால், நாங்கள் யாரையும் பணயம் வைக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால், பெரிய அளவிலான பணம் எங்களுக்கு இழப்பு நேர்ந்தாலும் பரவாயில்லை" என்றார்.

இதையும் படிங்க:கொரோனாவால் தடை செய்யப்படுமா ஒலிம்பிக்?

ABOUT THE AUTHOR

...view details