அமெரிக்கா, மலேசியா, இந்தியா என உலகின் பல்வேறு நகரங்களில் உள்ள ஆண்டென்னா, கட்டடம், பாலம் என அனைத்து இடங்களிலிருந்தும் பகல், இரவு நேரங்களில் பேஸ் ஜம்பிங் செய்து வியக்கவைத்தவர் மயாங்க் நாக்பால். இதற்காக இவரது பெயர் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.
இது குறித்து மயாங்க் பேசுகையில், ''லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் எனது பெயர் இடம்பெறவவிருப்பது பெருமையாக உள்ளது. சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீதான காதல் அதிகம். அதிகமாக த்ரில் அனுபவம் பேஸ் ஜம்பிங்கில் கிடைப்பதால், அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.