இரண்டாவது இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில், மகளிர் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் ஆறுமுறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம், வான்லா டுவாட்டியுடன் மோதினார்.
இதில், ஆதிக்கம் செலுத்திய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம், அவர் தொடர்ந்து இரண்டாவது வருடமாக தங்கம் கைப்பற்றினார். இதேபோல், 60 கிலோ எடைப் பிரிவுப் போட்டியில் சரிதா தேவி 3-2 என்ற கணக்கில், சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கம் வென்றார்.