தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இளைஞர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள கோ-கோ! - கோ-கோ கூட்டமைப்பின் தலைவர்

இந்தியாவிலுள்ள இளைஞர்கள் மத்தியில் கோ-கோ விளையாட்டின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக இந்திய கோ-கோ கூட்டமைப்பின் தலைவர் சுதான்ஷு மிட்டல் தெரிவித்துள்ளார்.

Kho kho prominence on the riseKho kho prominence on the rise, says KKFI chief, says KKFI chief
Kho kho prominence on the rise, says KKFI chief

By

Published : Oct 26, 2020, 5:45 PM IST

Updated : Oct 26, 2020, 5:53 PM IST

இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பவற்றில் ’கோ-கோ’வும் ஒன்று. இந்நிலையில் இவ்விளையாட்டின் முக்கியத்துவம் இளைஞர்களின் மத்தியில் அதிகரித்து வருவதாக இந்திய கோ-கோ கூட்டமைப்பின் தலைவர் சுதான்ஷு மிட்டல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மிட்டல், "இந்தியாவில் கோ-கோ விளையாட்டை முன்னிலைப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவிற்கும் முதலில் நன்றியைத் தெரிவிக்கிறேன். ஏனெனில் அரசு வேலைகளின் விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவில் கோ-கோ விளையாட்டையும் மத்திய அரசு இணைத்துள்ளது.

இதன் காரணமாக சமீப காலமாக இளைஞர்கள் மத்தில் கோ-கோ விளையாட்டின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இனி வரும் காலங்களில் கோ-கோ விளையாட்டு வீரர்கள், தங்களது எதிர்காலம் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

மேலும் நடப்பு ஆண்டிற்காக கோ-கோ லீக் போட்டிகள் நவம்பர் 21ஆம் தேதி முதல் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கோ-கோ லீக்கிற்கான மாற்று தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"தீப்பெட்டி தொழிலாளி மகன் டூ இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்"

Last Updated : Oct 26, 2020, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details