கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் நடத்தப்பட்ட கேலோ இந்தியா மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றவர் சோனாலி. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சோனாலியின் மல்யுத்தப் பயிற்சி தடைபடாமல் இருக்க, வீட்டிற்கு அருகிலேயே ஒரு மல்யுத்த அரங்கினை ஏற்படுத்தியுள்ளார். இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது என்னவென்றால், அவரது தந்தை ஒரு விவசாயி. பொருளாதாரப் பிரச்னைகள் அதிகமாக குடும்பத்தில் இருந்தாலும், மகளின் பயிற்சிக்காக அவர் அதிகமான சிரமங்களை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து சோனாலி ஈ டிவி பாரத் செய்திகளிடம் கூறுகையில், “உலக நாடுகளுக்கு முன்னால் இந்தியாவின் பெயரை தலைநிமிரச் செய்ய வேண்டும் என்பது தான் என் கனவு. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்ல வேண்டும். கரோனாவால் எனது பயிற்சி தடைபட்டது. ஆனால் அதனை சரிசெய்ய எனது தந்தை எங்கள் விவசாய நிலத்திலேயே மல்யுத்த அரங்கை ஏற்படுத்தினார்'' என்றார்.