2016ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் தீபா மாலிக். எஃப் 53 குண்டு எறிதல் பிரிவில் இவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
குண்டு எறிதல் போட்டியில் இதுவரை தேசிய அளவில் 58 பதக்கங்களும், சர்வதேச அளவில் 23 பதக்கங்களும் வென்ற இவரை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு கடந்தாண்டு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்கியது. இந்த விருதை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
ஏற்கனவே பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது வென்ற இவர், கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பாரலிம்பிக் கமிட்டியின் தலைவராக (பி.சி.ஐ) தேர்வு செய்யப்பட்டார். தேசிய விளையாட்டுக் கொள்கையின்படி, போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் எந்த கூட்டமைப்புகளிலும் நிர்வாகிகளாக பதவி வகிக்க முடியாது.