சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரசால் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதுவரை இந்தியாவில் 694 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவவிடாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தனது ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக அசாம் மாநிலத்திற்கு வழங்கியுள்ளார்.