தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:40 PM IST

ETV Bharat / sports

நம்பர் 1 தான் குகேஷின் இலக்கு..! கிராண்ட் மாஸ்டரின் பயிற்சியாளர் பிரத்யேக பேட்டி..

Grand Master Gukesh Tops Fide India Rank: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ்.

குகேஷ்
Gukesh

சென்னை: உலக செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கு தகுதி பெற்ற மூன்றாவது இளம் வயது நபர் என அனைவராலும் அறியபடும் நபராக உருவெடுத்துள்ளார் குகேஷ். கடந்த 2019ல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற குகேஷ் தற்போது இந்திய செஸ் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் 37 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்து வந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கான உலக தரவரிசை பட்டியலில் தற்போது குகேஷ் 2758 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த செஸ் உலக கோப்பை தொடரில் அவர் கால் இறுதி ஆட்டம் வரை முன்னேறி இருந்தார். தற்போது உலக தரவரிசையில் டாப் -10 வரிசையில் இடம் பிடித்துள்ள குகேஷ் கொரோனா காலகட்டத்தில் செஸ் விளையாட்டு சார்ந்த முக்கியமான அம்சங்களில் கிராண்ட் மாஸ்டர் பிரசான்னாவுடன் கவனம் செலுத்தியதே இந்த முன்னேற்றத்திற்கு காரணம்.

குகேஷின் இந்த சாதனை குறித்து அவருடைய பயிற்சியாளர் விஷ்ணு கூறியதாவது; “இவ்வளவு சிறிய வயதில் பல சாவல்களை கடந்து வருவது என்பது கடினமான ஒன்று. ஆனால் இந்த சாதனை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு மிகவும் பெருமையாக உள்ளது. அவர் மேலும் முன்னேற வேண்டும் என்பது எனது விருப்பம் எனவும், திறமை என்பது இருந்தாலும் கூட அவருடைய தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி இதன் மூலமாகவே அவர் இந்த இடத்தை அடைந்துள்ளார் என்றார்.

மேலும், அவருக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தி கொண்டார். இவ்வளவு சிறிய வயதில் வேறு யாரும் செய்யாத சாதனையை குகேஷ் செய்துள்ளார். உலக தரவரிசை பட்டியலில் அவர் 8வது இடத்தில் இருக்கிறார். அது அவருக்கு முக்கிய போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும்.

அவருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பது அவருடைய பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் தான். அடுத்த கட்டமாக எங்களுடைய திட்டம் என்பது உலக தரவரிசையில் 8வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறுவது தான். ஓய்வில்லாமல் தொடர்ந்து அவரும் பயிற்சி, போட்டிகள் என பயணித்து கொண்டே இருக்கிறார்.

மேலும், தற்போது செஸ் போட்டி என்பது கிரிக்கெட் விளையாட்டு போட்டி போலவே எல்லா வடிவங்களிலும் வரத்தொடங்கி விட்டது. இவர் இளம் வீரர் என்பதால் அனைத்து போட்டிகளுக்கும் இவருக்கு அழைப்பு கொடுக்கபடுகிறது. அனைத்து போட்டிகளின் புள்ளிகளும் எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் அது அவரது தர வரிசை பட்டியலில் அவரை முன்னேறி செல்ல பயன்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:Asia Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் அணி நாளை மோதல்!

ABOUT THE AUTHOR

...view details