தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

’பைக் பந்தயத்தை அரசு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும்’ - பைக் பந்தயத்தை அரசு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும்

பைக், கார் பந்தயம் உள்ளிட்டவற்றை அரசு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும் என்று பிரபல பைக் ரேலி வீரரான சி.எஸ். சந்தோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிஎஸ் சந்தோஷ், bike racer, cs santosh
சிஎஸ் சந்தோஷ், bike racer, cs santosh

By

Published : Dec 25, 2019, 8:49 PM IST

இந்திய பைக் பந்தய வீரர் சி.எஸ். சந்தோஷ், பைக் ரேலி பந்தயங்களில் இந்தியா சார்பில் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார். டாக்கர் ரேலி பந்தயத்தில் தொடர்ந்து பங்கேற்றுவரும் இவர் சவால் மிகுந்த அந்தப் பந்தயத்தை மூன்று முறை நிறைவு செய்துள்ளார். அதிலும் கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடான செனிகல்லில் நடைபெற்ற டாக்கர் ரேலி பந்தயத்தில் சந்தோஷ் 34ஆம் இடம் பிடித்தார்.

இதனிடையே பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சந்தோஷ் தனது ரேஸ் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

”எனக்கு பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளது. நான் சிறுவயதாக இருந்தபோதே எனது வாழ்க்கை சாகசங்கள் மிகுந்த ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவ்வாறு எனது இளம் வயது இல்லாத காரணத்தால் பைக் ரேஸை தேர்ந்தெடுத்தேன். அதன்பின் என் வாழ்வில் சாகசங்கள் நிறைந்த அனுபவங்கள் கிடைத்தன.

நான் கல்லூரியில் பயின்றபோது முதலில் கியர் இல்லாத பைக்கையே ஓட்டிச் செல்வேன். அதன்பின் எனது தந்தை எனக்கு பைக் வாங்கிக் கொடுத்தார். பின்னர் வேகத்தின் மீதான எனது ஆர்வம் அதிகரித்தது. இதனால் அந்த பைக்கை வைத்து நான் தெருக்கள், சாலைகளில் பந்தயத்தில் ஈடுபட்டேன். ஆனால் இந்த பந்தயம் எனக்கு சரியானது இல்லை என்பதை உணர்ந்து பைக் பந்தயங்களில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கு அகாடமி இருப்பதை அறிந்தேன். பின்னர் எனது 19ஆவது வயதில் டிவிஎஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன்” என்றார்.

சிஎஸ் சந்தோஷ்

பின்னர் மோட்டார் வாகன பந்தயங்கள் இந்தியாவில் பிரபலமடையாமல் இருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ’பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தை பெரியதாக உள்ளது. எனவே அது இயற்கையாகவே செயல்படும்.

ஆனால் உங்களின் பொருட்களை பிற உற்பத்தியாளர்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று எண்ணினால் அதை நீங்கள் ரேஸிற்கு கொண்டு வர வேண்டும். அதையே உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களும் செய்துவருகின்றன. இது இந்தியாவிலும் நடந்துவருகிறது. தற்போது வாகனங்களை வாங்குபவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக படித்த பின்பே வாங்குகின்றனர்.

சிஎஸ் சந்தோஷ்

மேலும் அரசாங்கம் மோட்டார் பந்தயங்களை ஒரு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும். அதுவே அரசின் உதவியை பெறுவதற்கான முதல் வழி. இளைஞர்கள் அனைவரும் தங்களின் ஆற்றலை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் அவர்களுக்கு திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

சிஎஸ் சந்தோஷ், 2020ஆம் ஆண்டு டாக்கர் ரேலி பந்தயத்தில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details